/* */

கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி

கீழ்பவானி கால்வாய் கரை உடைப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் முதற்கட்டமாக மீண்டும் 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி
X

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து நாற்பத்தி ஏழாயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வருடாவருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம்.

அதேபோல், இந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பின்னர் ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட கரை உடைப்பின் காரணமாக அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்து விடப்பட்ட தண்ணீர் ஆகஸ்ட் 19ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் மீண்டும் பாசனத்திற்காக 200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, படிப்படியாக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம்

இன்று காலை 6 மணி நிலவரப்படி, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 30.31 டிஎம்சி ஆகவும், அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 813 கன அடியாகவும் உள்ளது.

தற்போது அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 488 கனஅடி நீர், கீழ்பவானி வாய்க்காலில் 200 கனஅடி நீர் பவானி ஆற்றில் 112 கன அடி நீர் என மொத்தம் 800 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மீண்டும் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 12 Sep 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு