/* */

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு

சத்தியமங்கலம் அருகே புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு
X

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள விண்ணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட வாலிபாளையம் கிராமத்தில், இன்று காலை புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளதாக வந்த தகவலையடுத்து, அதனை தடுத்து நிறுத்த வாலிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.

புதிதாக திறக்கப்பட உள்ள கடைக்கு அருகாமையில் ரேசன் கடை, ஆர்.சி.துவக்கப்பள்ளி, கிறிஸ்தவ வழிபாட்டுத்தலம், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல இடங்களுக்கு பொதுமக்கள் இந்த வழியை தான் பயன்படுத்தி வருகிறார்கள். பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த வழியை தான் பயன்படுத்துகிறார்கள். ஆகவே இந்த இடத்தில் புதிய டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி, ஏராளமான பெண்கள் கடை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தின் காரணமாக இன்று டாஸ்மாக் கடை திறக்கப்பட மாட்டாது என போலீசார் அறிவித்ததால், இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 20 Feb 2021 12:33 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு