/* */

ஆசனூர் அருகே காட்டு யானை குட்டியுடன் சாலையை வழிமறித்து நின்றதால் பரபரப்பு

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் ஆசனூர் அருகே காட்டு யானை குட்டியுடன் சாலையை வழிமறித்து நின்றதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

ஆசனூர் அருகே காட்டு யானை குட்டியுடன் சாலையை வழிமறித்து நின்றதால் பரபரப்பு
X

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் மான், யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கொரோனா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக மைசூர் செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது வனவிலங்குகள் சாலையோரம் நடமாடி வருகின்றன.


இந்நிலையில் இன்று ஆசனூர் சீவக்காய் பள்ளம் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை தனது குட்டியுடன் சாலையில் நின்று தீவனம் உட்கொண்டு இருந்தது இதை கண்டு அச்சமடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சாலையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் சுமார் அரை மணி நேரம் கழித்து யானை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது அதன் பின் வாகனங்கள் செல்ல தொடங்கியது. நீண்ட நேரம் சாலையை வழிமறித்து நின்ற யானையால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 3 Jun 2021 10:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  3. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  4. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  5. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  6. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  7. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!