/* */

கொரோனாவால் பலியானவர் உடலை அடக்கம் செய்ய முன்வராத உறவினர்கள்!

கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் யாரும் முன்வராத நிலையில் விடியல் இளைஞர் மன்றத்தினர் மற்றும் சுகாதாரத்துறையினர் முன்வந்து அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த பசப்பன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் கொங்க மல்லப்பா(55).இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். திங்கட்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதால் தன்னுடைய வீட்டிற்கு புறப்பட்டு வந்துவிட்டார். வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருந்த நிலையில், திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து மருத்துவர்கள் அங்கு செல்வதற்கு முன்பு, அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு உயிர் இழந்ததால் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் யாரும் வராததால் அவரது உடல் வீட்டிலயே கேட்பாரற்று கிடந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற விடியல் இளைஞர் மன்றத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர், உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி சென்று அடக்கம் செய்தனர். விடியல் இளைஞர் மன்றத்தினரின் செயலை பலரும் பாராட்டினர்.

Updated On: 11 May 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  2. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  3. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  4. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  5. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  6. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  8. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  9. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்