/* */

102 அடியை எட்டிய பவானிசாகர் அணை; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகர் அணை 102 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

102 அடியை எட்டிய பவானிசாகர் அணை; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்கி வருகிறது.

நீலகிரி மலைப்பகுதியில் கடந்த மாதம் பரவலாக மழை பெய்ததால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது ஆண்டாக 100 அடியை எட்டியது. அதிலிருந்து பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியே இருந்து வந்தது.

தற்போது நீலகிரி மலைப்பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. அணையில் தண்ணீர் தேங்குவது குறித்து பொதுப்பணித்துறை வகுக்கப்பட்ட விதியின்படி செப்டம்பர் 30-ஆம் தேதி வரை 102 அடி வரையிலும், அக்டோபர் முதல் தேதியிலிருந்து அணையின் முழு கொள்ளளவான 105 அடி வரையும் தண்ணீர் தேக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித் துறையினர், வருவாய்த் துறையினர் ஒலிபெருக்கி தண்டோரா மூலம் பவானி கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். பவானி ஆற்றில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இன்று காலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 829 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காளிங்கராயன் பாசனத்திற்காக 422 கன அடியும், பவானி ஆற்றுக்கு 4348 கன அடியும் என மொத்தம் 4770 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 4 Sep 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  3. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  4. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  5. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  6. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  7. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  8. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  9. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  10. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!