/* */

காட்டு யானை தாக்கி ஒருவர் படுகாயம்

கடம்பூர் மலைப்பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

காட்டு யானை தாக்கி ஒருவர் படுகாயம்
X

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப் பகுதியை சேர்ந்த சிவராஜ் என்பவர் மாவல்லம் பகுதியில் உள்ள ஜடைசாமி கோயிலுக்கு செல்வதற்காக கடம்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது உகினியம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் புதருக்குள் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை திடீரென சிவராஜை தாக்கியுள்ளது. பின்னர் சிவராஜ் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை ஆத்திரத்தில் சேதப்படுத்தியது. இதில் முதுகு எலும்பு மற்றும் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு போராடிய சிவராஜை சாலை வழியாக வந்த சிலர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து காப்பாற்றினர்.

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காட்டுயானை தாக்கியதில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 23 March 2021 8:06 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  2. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  3. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  4. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  9. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  10. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!