வாழைக்காய் வியாபாரியிடம் பணம் பறிமுதல்

பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சத்தியமங்கலம் அருகே பண்ணாரி ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக எகிடே என்பவரின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 4 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சத்தயமங்கலம் அருகே சாம்ராஜ் நகரை சேர்ந்தவர் என்பதும் வாழைக்காய் வியாபாரம் செய்து வருவதாகவும் தெரிவித்தார். இவர் வாழைக்காய் விற்பனை செய்ததில் வந்த 4 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு தனது ஜெ.சி.பி வாகனத்திற்கு ஸ்பேர்ஸ் வாங்க சேலம் சென்று கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து பறிமுதல் செய்த பணத்தை கருவூலத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu