/* */

லாரி கவிழ்ந்து விபத்து - போக்குவரத்து பாதிப்பு

லாரி கவிழ்ந்து விபத்து - போக்குவரத்து பாதிப்பு
X

ஈராேடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாம்ராஜ்நகரில் இருந்து கருங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திம்பம் மலைப்பாதை வழியே வந்து கொண்டிருந்தது. அப்போது திம்பம் மலைப்பாதை 13 வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்ப முடியாமல் பழுதடைந்து நின்றது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் கிரேன் வாகனம் மூலம் லாரியை அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக லாரி கருங்கல் பாரம் தாங்காமல் திடீரென கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் அருகே நின்று கொண்டிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் மீண்டும் கிரேன் வாகனம் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.இதன் காரணமாக தமிழகம், கர்நாடகா மாநிலங்களுக்கிடையே சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On: 14 March 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!