/* */

வடமாநில இளைஞர் கல்லால் அடித்து கொலை

வடமாநில இளைஞர் கல்லால் அடித்து கொலை
X

சத்தியமங்கலம் அருகே வடமாநில இளைஞர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல்நிலையம் பின்புறம் பவானி ஆற்றங்கரையோரத்தில் வரசித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இன்று காலை வழக்கம் போல் கோவிலில் பூஜை செய்வதற்காக கோவில் பூசாரி வந்துள்ளார். அப்போது கோவில் கதவின் முன்புறம் வடமாநில இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இறந்து கிடந்தவர் சுமார் 21 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞர் என்பதும் இளைஞரின் தலையில் கல்லால் பலமாகத் தாக்கப்பட்டு இறந்ததும் தெரிய வந்துள்ளது. பிரேதத்தை கைப்பற்றிய சத்தியமங்கலம் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த நபர் யார் ? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Feb 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  3. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...