/* */

தீ விபத்தில் இரண்டு வீடுகள் எரிந்து நாசம்

புஞ்சை புளியம்பட்டியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு வீடுகள் எரிந்து நாசம்.

HIGHLIGHTS

தீ விபத்தில் இரண்டு வீடுகள் எரிந்து நாசம்
X

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி, கோட்டப்பாளையம் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் நிறைந்த இந்த பகுதியில், இன்று மாலை சுமார் 5 மணி அளவில் திடீரென ஒரு வீட்டில் தீப்பிடித்தது. தீ மளமளவென எரிந்ததில் அருகில் உள்ள மற்றொரு வீட்டிலும் தீ பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. அந்த பகுதியில் தொழிலாளர்கள் இன்று வேலைக்கு சென்று விட்டதால், அங்கிருந்த சிலர் தாமாக முன்வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் மற்றும் நம்பியூரில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்ததால், தீ மேலும் மற்ற வீடுகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது. எனினும் கொழுந்துவிட்டு எரிந்த தீயினால் சின்ன பழனி மற்றும் ராமாள் ஆகியோருக்கு சொந்தமான இரு வீடுகளும் முழுவதும் தீக்கிரையாகியதோடு, வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் தீயில்கருகி சாம்பல் ஆனது.

Updated On: 17 Feb 2021 6:06 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...