/* */

அனைத்து கோயில்களிலும் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் சேகர்பாபு

தமிழகத் திருக்கோயில்களில் உள்ள அனைத்து காலி பணியிடங்களும் முறைகேடுகள் நிகழாமல் நிரப்பப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அனைத்து கோயில்களிலும் காலி பணியிடங்கள்  நிரப்பப்படும் : அமைச்சர் சேகர்பாபு
X

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் உள்ள புகழ்பெற்ற சங்கமேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு நடத்தி சாமி தரிசனம் செய்தார்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கடந்த சில தினங்களாக ஆய்வு நடத்தி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக இன்று ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் உள்ள புகழ்பெற்ற சங்கமேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு நடத்தி சாமி தரிசனம் செய்தார்.

இதன் பின்னர் காவிரி,பவானி,அமுதநதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் புனித நீரை எடுத்து தெளித்து கொண்டார்.

இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் பக்தர்கள் போதுமான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

அப்போது பக்தர்கள் வழங்கப்படும் அன்னதான எண்ணிக்கை மற்றும் ஆக விதிமுறைகள் குறித்து அறநிலையத்துறையின் அலுவலரிகளிடம் கேட்டறிந்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது.

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் உள்ள 47கோவில்களில் இருந்து கூடுதலாக தரம் உயரத்துவது தொடர்பாக 539கோவில்கள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 450திருகோவில்கள் தரம் உயர்த்த பரீசிலினையில் உள்ளது. இதனை முதல்வருடன் கலந்து ஆலோசித்து தரம் உயர்த்தப்படும். இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் பெரும்பாலும் பெரிய கோவில்களில் வரும் வருவாய் வைத்து சிறிய கோவில்களை நடத்தி வருவதால் அர்ச்சனை கட்டணம் நீக்கப்படுவது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசிக்கப்படும்.

இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்கள் முறைகேடுகள் நிகழாமல் நிரப்படும்.

தகுதியான பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இதனை தெடர்ந்து ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயில், சென்னிமலை முருகன் கோயில்களில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உட்பட துறைசார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 23 July 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...