/* */

ஈரோடு அருகே நூல் மில்லில் தீவிபத்து : 30 லட்சம் மதிப்பிலான் பொருட்கள் சாம்பல்

ஈரோடு அருகே, நூல் மில்லில் ஏற்பட்ட தீவிபத்தால் 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சாம்பலாகின.

HIGHLIGHTS

ஈரோடு அருகே நூல் மில்லில் தீவிபத்து : 30 லட்சம் மதிப்பிலான் பொருட்கள் சாம்பல்
X

ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் சித்தோடு அருகே உள்ள ஆட்டையாம்பாளையம் பகுதியல் நூல் மில் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நூல் மில்லில், 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு நூல் மில்லை பூட்டி சென்றுள்ளனர். இதனையடுத்து நள்ளிரவில் நூல் மில்லில் தீ பற்றி எறிய தொடங்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே ஒரு இடத்தில் பற்றிய தீயானது மில் முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எறிய தொடங்கியது.

சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு, பவானி, பெருந்துறை ஆகிய 3 இடங்களை சேர்ந்த தீயணைப்பு துறையினர் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் நூல் மில்லில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து நிகழ்ந்துள்ளதாகவும் சுமார் 30 லட்சம் மதிப்பிலான நூல்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவைகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். நூல் மில்லில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 3 July 2021 5:25 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அதிபர் இறப்பில் Israel சதிவேலையா? திடுக்கிடும் அரசியல் பின்னனி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  6. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  7. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  8. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  10. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!