/* */

பவானி நகராட்சி சார்பில் சாலையோர கொரோனா பரிசோதனை மையம்: வரமறுக்கும் பொதுமக்கள்

பவானி நகராட்சி சார்பில், சாலைகளில் அமைக்கப்படுள்ள கொரோனா பரிசோதனை மையத்திற்கு வந்து பரிசோதனை செய்ய பொதுமக்கள் தயங்குகின்றனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை பரவலை தடுக்க, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர், போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாகச்சென்று சளி,காய்ச்சல் குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதேபோல், பவானி நகராட்சி சார்பில் 10 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாகச்சென்று பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து சாலைகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு சாலைகளில் செல்வோருக்கென தனியாக தனியாக பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கென தனியாக 10 நபர்களை பவானி நகராட்சி நிர்வாகம் நியமனம் செய்துள்ளது. அதன் அடிப்படையில் முகாம் ஊழியர்கள் சாலைகளில் செல்லும் மக்களை பரிசோதனைக்கு அழைத்தால், அவர்கள் அலட்சியம் காட்டி வர மறுப்பதோடு தரக்குறைவாக பேசுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஊழியர்களில் சிலர் மிகவும் மனவேதனை அடைவதாகவும் இதற்கான மாற்று வழியை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 17 Jun 2021 1:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  2. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  3. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  4. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  6. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  7. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  9. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  10. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!