/* */

கோவில்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு பொதுமக்கள் வழிபட தடை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு பொதுமக்கள் வழிபட தடை.

HIGHLIGHTS

கோவில்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு பொதுமக்கள் வழிபட தடை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆடி மாதம் முழுவதும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அதிகளவு கோயில்களில் கூட்டம் கூடுவதன் காரணத்தால் இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் மக்கள் கோவில்களில் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் மக்கள் கோவில்களில் வெளியிலேயே நின்று சாமி கும்பிட்டு சென்றனர். இந்நிலையில் ஆடி மாதம் முடிந்தும் மீண்டும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பொதுமக்கள் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், கோபி கொண்டத்துக்காளியம்மன் கோவில், ஈரோடு மாநகரில் புகழ்பெற்ற ஈஸ்வரன் கோவில்கள் , பெரிய மாரியம்மன் கோவில் நடைகள் சாத்தப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் சாமி கும்பிட வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஒரு சில மக்கள் கோவில் வெளியே நின்று சாமி கும்பிட்டு விளக்கேற்றி வழிபட்டு சென்றனர்.

Updated On: 3 Sep 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  3. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  4. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  5. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  6. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  7. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  8. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  9. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  10. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு