/* */

பவானி அருகே வயலில் தீ: ரூ.1 லட்சம் மதிப்பிலான கரும்புகள் கருகின

பவானி அருகே, கரும்பு காட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ஒரு லட்சம் மதிப்பிலான கரும்புகள் தீயில் கருகி சாம்பலாகின.

HIGHLIGHTS

பவானி அருகே வயலில் தீ:  ரூ.1 லட்சம் மதிப்பிலான கரும்புகள் கருகின
X

ஈரோடு அடுத்துள்ள நாயக்கன்பாளையம் பகுதியில், வயலில் ஏற்பட்ட தீ விபத்தில் கரும்புகள் எரிந்து சேதமாகின. 

ஈரோடு அடுத்துள்ள நாயக்கன் பாளையம் பகுதியில் வசிப்பவர் குமரேசன். இவர் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில், ஆலைக்கரும்பு பயிரிட்டு உள்ளார்.

நேற்றிரவு, குமரேசனின் கரும்பு தோட்டத்தில் இருந்து திடீரென பயங்கர புகை வந்துள்ளது. இதையடுத்து, மளமளவென வயலில் தீ பரவ ஆரம்பித்தது. இதில், கரும்புகள் தீப்பற்றி எரிய தொடங்கின.

இச்சம்பவம் குறித்து, அப்பகுதி மக்கள் பவானி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி கரும்புத் தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கரும்புகள் எரிந்து சாம்பலாகின. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 7 Jun 2021 5:24 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...