வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
X
வங்கி ஊழியர் போராட்டம், 2,600 ஊழியர்கள் ஈடுபட்டு 2,400 கோடி பரிவர்த்தனை முடங்கும்

ஈரோடு மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் சுமார் 2,400 கோடி ரூபாய் அளவிலான பண பரிவர்த்தனைகள் முடங்கும் என வங்கி ஊழியர் சங்க நிர்வாகி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட வங்கி ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் நரசிம்மன் கூறுகையில், வங்கிகளில் உள்ள நிரந்தரப் பணிகளை வெளியாட்களிடம் ஒப்படைக்கக் கூடாது என்பதுடன், வங்கித் துறையில் நிலவும் தொழிலாளர் விரோதப் போக்கை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தப் போராட்டத்தில் தேசிய வங்கிகளைச் சேர்ந்த 2,600 ஊழியர்கள் பங்கேற்பர் என்றும், மாவட்டத்தில் தினமும் சராசரியாக 1,200 கோடி ரூபாய் அளவில் தேசிய வங்கிகளில் பண பரிவர்த்தனை நடைபெறுவதால், இரண்டு நாள் வேலை நிறுத்தத்தால் 2,400 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் முடங்கும் எனவும் குறிப்பிட்டார். எனினும் எச்.டி.எப்.சி., ஆக்சிஸ், பி.பி.எஸ்., - சி.யு.பி., போன்ற வங்கிகள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்காது எனவும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story