ரவுடிகளின் குற்றச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி

ஈரோட்டில் 7 ரவுடிகள் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை அடக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) ஜவகர் உத்தரவிட்டார். இதன்பேரில், போலீசார் கொலை, கொலை முயற்சி, அடிதடி மற்றும் போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களின் விவரங்களை சேகரித்தனர்.
விசாரணையின் அடிப்படையில், ஈரோடு சூரம்பட்டிவலசை சேர்ந்த தக்காளி விக்கி என்ற விக்னேஷ், அணைக்கட்டு பூபதி என்கிற பூபதி, ஸ்டோனி பாலம் பகுதியை சேர்ந்த காளியப்பன், சரவணன் (எ) புறா சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் விக்னேஷ் மீது கொலை உள்ளிட்ட 9 வழக்குகள், பூபதி மீது அடிதடி தொடர்பான 9 வழக்குகள், காளியப்பன் மீது அடிதடி வழக்கு மற்றும் புறா சரவணன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
அதேபோல், வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலைப்பகுதியில் உள்ள கோகுல்நாத் (எ) சொட்டை கார்த்தி, சந்திரபிரகாஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களும் கஞ்சா விற்பனை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்தது. மேலும், ஈரோடு டவுன் போலீசாரின் சுற்றிவளைப்பில் மரப்பாலம் பகுதியை சேர்ந்த நிக்காத்தையும் (22) கைது செய்யப்பட்டார். இவர் மீது கஞ்சா விற்பனை மற்றும் அடிதடி வழக்குகள் உள்பட 6 குற்றச்செயல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாநகரில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க, குற்றவாளிகளை பிடிக்க போலீசார் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கை, பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu