தீக்குளித்து உயிரிழந்த முதியவர்

X
By - Nandhinis Sub-Editor |29 March 2025 12:00 PM IST
சென்னிமலை பகுதியில், 80 வயது முதியவர் தீக்குளித்து உயிரிழந்தார்
தீக்குளித்த முதியவர் உயிரிழப்பு – போலீசார் விசாரணை
சென்னிமலை: சென்னிமலை அருகே மணிமலையைச் சேர்ந்த சுப்பிரமணியன், தனியார் பொறியியல் கல்லூரியில் ஆய்வு உதவியாளராக பணிபுரிகிறார். அவரது தந்தை துரைசாமி (80), நாமக்கல்-பாளையம் மின்னக்காடு பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
கடந்த 20ம் தேதி மாலை, துரைசாமி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். உடனே அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மருத்துவர்களின் முயற்சிக்குப் பலனின்றி, அவர் நேற்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu