/* */

கழிவுநீரை வெளியேற்றிய 3 சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

ஈரோட்டில், கழிவுநீரை வெளியேற்றிய மூன்று சாய ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கழிவுநீரை வெளியேற்றிய 3 சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு
X

சித்தரிப்பு படம் 

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பூஜ்யநிலைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை, முறையாக பராமரிக்காமல், கழிவுநீரை அருகிலுள்ள கால்வாயில் வெளியேற்றும் தொழிற்சாலைகளின் மீது, மின் இணைப்பு துண்டிப்பு உள்ளீட்ட உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், சமீபத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியில் இயங்கி வந்த மூன்று சாய தொழிற்சாலைகள், அதன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக இயக்காமல், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை அருகிலுள்ள சாக்கடைக் கால்வாயில் வெளியேற்றியது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அந்த தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நீர்நிலைகளில் வெளியேற்றும் தொழிற்சாலைகள் திடக்கழிவுகளை, இரவு நேரங்களில் கொட்டும் வாகனங்கள் மீதும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மூலம் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 9 Nov 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  7. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  9. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  10. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்