/* */

ஈரோட்டில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து

ஈரோட்டில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

ஈரோட்டில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து
X

சேதமடைந்த வீடு.

ஈரோடு சூளை பகுதியில் உள்ள பாரதி நகரில் வசித்து வருபவர்கள் அந்தோணியம்மாள் ( 60 ) மற்றும் வசந்தா (61 ). இவர்கள் இருவரும் தனது ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை முதலே பெய்து வரும் கனமழையின் காரணமாக, இவர்களது வீட்டின் சுவர் இடிந்து, வெளிப்புறமாக விழுந்தது. வீட்டின் சுவர் வெளிப்புறமாக விழுந்ததால், வீட்டில் தனியாக இருந்த அந்தோணியம்மாள் வசந்தா ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இருந்தபோதிலும் வீட்டின் உட்புறமும், வெளிப்புறமும் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 4 Dec 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்