தொழிலாளியின் வீட்டில் மர்ம திருட்டு

தொழிலாளி வீட்டில் ரூ.1 லட்சம் திருட்டு – போலீசார் விசாரணை
பவானி: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாதுராம் (43) என்பவர் ஆப்பக்கூடல் மாகாளி வீதியில் தங்கியிருந்து, டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று, வீட்டின் பூட்டு சாவி தொலைந்து போனதால், பீரோவை மட்டும் பூட்டி, கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு வேலைக்கு சென்றார்.
மாலை வேலை முடித்து திரும்பிய போது, கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்ப்பதற்குள் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் காணவில்லை. உடனே ஆப்பக்கூடல் போலீசில் புகார் அளித்தார்.
நாதுராமின் புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தடய விசாரணை மேற்கொண்டுள்ளனர். அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. திருட்டு நடந்த விதத்தை வைத்து, அருகில் உள்ளவர்கள் மீது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu