ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
X
ஆப்பக்கூடல் ஏரிக்கரையோரத்தில் 2.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

பவானி அருகே சத்தி சாலையில் அமைந்துள்ள 126 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆப்பக்கூடல் ஏரியின் கரையோரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 2.5 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டுள்ளனர். ஆப்பக்கூடல் டவுன் பஞ்சாயத்து புதுப்பாளையத்திலும், வேம்பத்தி பஞ்சாயத்து வெள்ளாளபாளையத்திலும் ஏரி கரையோரத்தில் 2.5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வந்தது. இதைக் கண்டறிந்த பொதுப்பணித்துறையினர் சில மாதங்களுக்கு முன் ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிரமித்த விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். எனினும் அந்த நோட்டீஸை மீறி விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் முகமது சுலைமான் ஆப்பக்கூடல் போலீசாருடன் சென்று ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டார். அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் ஏலம் விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story