/* */

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இருக்கைகள் நிரம்பியது

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இருக்கைகள் நிரம்பியது
X

ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நாளை முதல் ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இருக்கைகள் நிரம்பியது

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ரெயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி வரும் 10 ம் தேதி முதல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சிறப்பு ரெயில் என்ற பெயரில் இயக்கப்படும் என்றும் ஆனால் முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கியது முதல் மக்கள் ஆர்வத்துடன் பதிவு செய்து வந்தனர். மேலும் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டன. சாதாரண டிக்கெட் ரூ.270, மூன்றாம் வகுப்பு ஏ.சி ரூ.700, இரண்டாம் வகுப்பு ஏ.சி.ரூ.1000, முதல் வகுப்பு ஏசி ரூ.1600-க்கு முன்பதிவு செய்யப்பட்டது. பயணிகள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 9 Jan 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  3. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  5. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  6. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!