/* */

திண்டுக்கல் அருகே போக்சோ வழக்கில் இருவருக்கு சிறை தண்டனை

வடமதுரையில் கடந்த 2022-ம் ஆண்டு 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக வழக்கு நடந்தது

HIGHLIGHTS

திண்டுக்கல் அருகே போக்சோ வழக்கில் இருவருக்கு சிறை தண்டனை
X

திண்டுக்கல் நீதிமன்றம்.(பைல் படம்)

போக்சோ வழக்கில், இருவருக்கு சிறை: நீதிமன்றம்.

திண்டுக்கல் அருகே,வடமதுரையில் போக்சோ மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கணவன், மனைவி 2 பேருக்கு சிறை தண்டனை திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் கடந்த 2022-ம் ஆண்டு 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக ராஜேஷ்குமார்(32), மனைவி கிருத்திகா(22) ஆகிய 2 பேரை வடமதுரை போலீசார் போக்சோ மற்றும் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அறிவுறுத்தலின் பேரில் ,

டிஎஸ்பி.துர்காதேவி தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் முயற்சியால் ,ராஜேஷ் குமாருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும், கிருத்திகாவிற்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.8000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

குடிநீர் கேட்டு சாலை மறியல்.

திண்டுக்கல் அருகே,சித்தையன் கோட்டையில், குடிதண்ணீர் கேட்டு, காலி குடங்களுடன் சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.இப் பகுதி மக்கள் குடிநீர் பிரச்சனையை தீர்க்கக் கோரி, பேரூராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று பலமுறை கூறியும், நடவடிக்கை இல்லையாம். மேலும், நிர்வாக அதிகாரியை பேரூராட்சி அலுவலகத்தில் பார்க்க முடியவில்லை என்றும் குற்றச்சாட்டி, சித்தையன் கோட்டையில், காலிக் குடங்களுடன் சாலை மறியல் செய்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 23 Aug 2023 2:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு