கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலாப்பயணிகள்
கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலாப்பயணிகள், இயற்கையை ரசித்து மகிழ்ந்தனர்.
HIGHLIGHTS
மலைகளின் இளவரசி கொடைக்கானலில் தொடர் விடுமுறை தினத்தை ஒட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு இருந்த சூழலிலும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலை நோக்கி படையெடுத்தனர்.
காலை முதலே சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது. கொடைக்கானலில் தற்போது திறக்கப்பட்டுள்ள சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண்பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக், உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்வதற்கு வரிசையில் சில மணி நேரங்கள் காத்து இருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கொடைக்கானலில் இதமான சூழலை சுற்றுலா பயணிகள் ரசித்து சென்றனர். கொடைக்கானல் தூண்பாறை பகுதியில் அவ்வப்போது மேக மூட்டங்கள் வந்து கண்ணாமூச்சி விளையாடிச் சென்றது, இதையும் சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.