/* */

பழனி அருகே வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணியை தொடங்கிய வனத்துறை அதிகாரிகள்

வனவிலங்குகளின் கால் தடங்களையும் சேகரித்து வருவதாகவும் விரைவில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படுமென வனத்துறை தகவல்

HIGHLIGHTS

பழனி அருகே  வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணியை தொடங்கிய வனத்துறை அதிகாரிகள்
X

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே வனப்பகுதியில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணியை வனத்துறை அதிகாரிகள் தொடங்கினர்

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே வனப்பகுதியில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணியை வனத்துறை அதிகாரிகள் தொடங்கினர்.

மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி சுமார் 18 ஆயிரம் ஹெக்டர் கொண்ட வனபகுதியாகும் இந்த வனபகுதியில் யானைகள், காட்டு எருமை, மான், புலி , சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

ஆண்டுதோறும் வனவிலங்குகளை வனத்துறை சார்பில் கணக்கிடப்படும் அதேபோல் இந்த ஆண்டும் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க கொழுமம் வனச்சரக அலுவலர் மகேஸ்வரி தலைமையில் 30 க்கும் மேற்ப்பட்ட வன ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக ,ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் பழனி அருகே கொழுமம் ,குதிரையாறு அணை, ஆண்டிப்பட்டி காவலப்பட்டி, கூக்கால் , சாமிகானல் ஆகிய வனசரகதிற்குள் 8 நாட்களுக்கு வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி நடைபெறும். இதில், வனவிலங்குகளின் கால் தடங்களையும் வனத்துறை அதிகாரிகள் சேகரித்து வருவதாகவும், விரைவில் எத்தனை வனவிலங்குகள் உள்ளன என அறிவிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 8 Dec 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  4. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  7. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  8. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
  9. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  10. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி