/* */

கன மழையினால் கொடைக்கானலில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம்.

கொடைக்கானலில் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக பெய்து வரும் கன மழையினால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

HIGHLIGHTS

கன மழையினால் கொடைக்கானலில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம்.
X

வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளி நீர் வீழ்ச்சி,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில் நேற்று அதிகாலை முதலே சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து சாரல் மழையும் பெய்தது.

இதனால் வெள்ளி நீர் வீழ்ச்சி அருவி, வட்டக்கானல் (லிரில்) அருவி, பாம்பார் அருவி, தேவதை அருவி, கரடிச்சோலை அருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் அருவிகள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. தொடர் மழையால் பொதுமக்கள் வீடுகளிலும், சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளிலும் முடங்கினர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று காலை மழை ஓய்ந்து சற்றே சூரியன் உதித்தது.

Updated On: 1 Dec 2021 4:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  8. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  9. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்