/* */

திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களின் தொகுப்பை இங்கே காணலாம்

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள்  பறிமுதல்
X

பைல் படம்

திண்டுக்கல்லில் 3 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கிடைத்த தகவலின் அடிப்படையில், மாநகர் நல அலுவலர் செபாஸ்டின் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, காமராஜ், செல்வராணி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் தீபிகா ஆகியோர் கொண்ட குழுவினர் பேருந்து நிலையம் பகுதிகளில் 2 கடைகள், பேகம்பூர் வத்தலகுண்டு ரோடு பகுதியில் ஒரு கடை என மொத்தம் 3 கடைகளில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர்களுக்கு ரூ.20 அபராதம் விதிக்கப்பட்டது.

சத்திரப்பட்டி அருகே கார் மின்கம்பத்தில் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி, 3 பேர் படுகாயம்:

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த சத்திரப்பட்டி பைபாஸ் சாலையில் நேற்று இரவு கொச்சினில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் டயர் வெடித்து அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே திருச்சி சேர்ந்த 2 இளைஞர்கள் பலியானார்கள், மேலும், 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து, சத்திரப்பட்டி ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 15 Nov 2023 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது