/* */

நிலக்கோட்டை அருகே காயம்பட்டவர்களை காப்பாற்றிய போலீஸ் ரோந்து வாகனம்

நிலக்கோட்டை அருகே காயம்பட்டவர்களை ரோந்து வாகன போலீசார் காப்பாற்றினர்.

HIGHLIGHTS

நிலக்கோட்டை அருகே காயம்பட்டவர்களை காப்பாற்றிய போலீஸ் ரோந்து வாகனம்
X

காயம்பட்டவர்களை காப்பாற்றிய போலீஸ் ரோந்து வாகனம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, விபத்தில் அடிபட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல், ஹைவே ரோந்து வாகனத்தில் ஏற்றி சென்ற போலீசாருக்கு பாராட்டுகள் குவியத் தொடங்கின.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மதுரை செல்லும் சாலையில் பாரத் பெட்ரோலியம் பங்க் அருகில் எதிர்பாராத விதமாக விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர்கள் அடிபட்டு படுகாயங்களுடன் ரோட்டில் கிடந்தனர். உடனடியாக, அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால் 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னால் அவ்வழியாக சென்ற அம்மைநாயக்கனூர் நெடுஞ்சாலை ரோந்து பணி போலீசார் விஜய் மற்றும் கங்காதரன் உடனடியாக அடிபட்டவர்களை நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் ஏற்றி சென்று நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால், 108 ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் மனிதாபிமானத்துடன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த இரண்டு காவலர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இவர்கள் இருவருமே காக்கிச்சட்டைக்குள் உள்ளம் ஈரம் உள்ளதை மெய்பித்து விட்டனர்.

Updated On: 19 Jan 2024 1:15 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...