/* */

திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - நத்தத்தில் பரபரப்பு

நத்தத்தில் திடீரென்று கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது; தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

HIGHLIGHTS

திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - நத்தத்தில் பரபரப்பு
X

தீப்பிடித்து எரிந்த கார். 

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. ஊறுகாய் ஏஜென்சி நடத்தி வருகிறார். அவருக்கு சொந்தமான காரை, மாரியம்மன் கோயில் முன்பாக நிறுத்தி வைத்துள்ளார். இன்று காலை, காரை ரவி ஸ்டார்ட் செய்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அதன் முன்பக்கம் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.

அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நத்தம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு துறையினர், உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர். நத்தம் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். திடீரென கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 18 Nov 2021 9:19 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  2. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  4. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  6. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  8. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  9. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  10. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...