போடிக்காமன்வாடி ஊராட்சி துணைத்தலைவரின் இணை கையெழுத்து அதிகாரம் ரத்து

X
பைல் படம்.
By - P.Palanimuthukumar, Reporter |30 Nov 2021 7:18 PM IST
போடிக்காமன்வாடி ஊராட்சி துணைத்தலைவரின் இணை கையெழுத்து அதிகாரத்தை ரத்து செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரை அடுத்த போடிக்காமன்வாடி ஊராட்சியில் 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். துணைத்தலைவர் விஜய்பழனி, செலவின பட்டுவாடா படிவத்தில் கையெழுத்திட மறுத்துள்ளார். எனவே மற்ற உறுப்பினர்கள் துணைத்தலைவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர்.
நிர்வாகத்தில் இணை கையெழுத்து பொறுப்பை விஜய்பழனியிடம் இருந்து பறித்து, 9 வது வார்டு உறுப்பினர் முத்துமாரிக்கு வழங்க வலியுறுத்தினர்.
ஆய்வு செய்த ஆத்தூர் பி.டி.ஓ., ஊராட்சி நிர்வாகத்திற்கு துணைத்தலைவர் ஒத்துழைக்க மறுத்ததை உறுதிப்படுத்தினார்.
இதையடுத்து துணைத்தலைவரின் இணை கையெழுத்து அதிகாரத்தை கலெக்டர் விசாகன் ரத்து செய்தார். 9வது வார்டு உறுப்பினர் முத்துமாரிக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu