/* */

வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி தேர்தலுக்கு எதிர்ப்பு

வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி தேர்தலுக்கு எதிர்ப்பு
X

குடகனாறு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கூறி அனுமந்தராயன் கோட்டை பொதுமக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினர். மற்றும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அருகில் அமைந்துள்ளது அனுமந்தராயன் கோட்டை. மேற்கு தொடர்ச்சி மலையில் மழை காலங்களில் பெய்யும் மழை நீரானது கன்னிமார் கோவில் அருகே இருந்து குடகனாறு ஆக மாறி ஆத்தூர், காமராஜர் நீர்த்தேக்கம் வழியாக மல்லையாபுரம் வீரக்கல் அனுமந்தராயன் கோட்டை மயிலாப்பூர், திண்டுக்கல், தாடிக்கொம்பு, வேடசந்தூர் உட்பட 300க்கும் மேற்பட்ட கிராமங்களின் வாழ்வாதாரமாக சுமார் 108 கிலோ மீட்டர் வரை குடகனாறு சென்று காவிரியில் கலக்கிறது.

குடகனாறு ஆற்றுப் படுகை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் குடகனாறு அணையை மட்டுமே நம்பியுள்ளனர். குடகனாறு தண்ணீரை மட்டும் நம்பி சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பல்வேறு விவசாய பொருட்களை விவசாயம் செய்து வந்தனர். இப்பகுதியில் அதிக அளவில் பூக்கள் நெல், வாழை, தென்னை என விவசாயம் செய்து வந்த விவசாயிகள் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கன்னிமார் ஓடை அருகே தடுப்பு அணை கட்டியதால் தண்ணீரானது குடகனாறு பகுதிக்கு வரவில்லை.இதனால் ஆத்தூர் பகுதியை சேர்ந்த சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை செய்து வந்தனர்.

ஆனால் தொடர்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டதால் தற்போது வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாகவும், நிரந்தரமாக குடகனாறு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் மேலும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கூறியதை உடனடியாக செயல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குடகனாறு ஆற்றுப்படுகை விவசாயிகளின் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என கூறி வீடு மற்றும் சாலைகளிலும் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாரும் அதிக அளவில் இப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On: 15 March 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...