/* */

தர்மபுரியில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

தர்மபுரியில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி தகவல் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

தர்மபுரியில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்
X

தர்மபுரி மாவட்டத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் திவ்ய தர்சினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

தர்மபுரி மாவட்டத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில் 1,47,595 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் இபோலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக கிராமப்பகுதியில் 964 முகாம்களும், நகராட்சி பகுதியில் 20 முகாம்களும் என மொத்தம் 984 முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. இப்பணிக்காக பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 4080-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், திரை அரங்குகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சுங்கச்சாவடி போன்ற இடங்களிலும் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.

தர்மபுரி மாவட்டத்தில் 18 நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் பிற துறை சார்ந்த 58 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அரசு வழங்கும் போலியோ சொட்டு மருந்து தரமானது, வீரியமிக்கது, பாதுகாப்பானது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் குறிப்பாக தாய்மார்கள், பெற்றோர்கள் தங்கள் வீடுகளில் உள்ள அன்று பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே பலமுறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், மீண்டும் நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்களில் அளிக்கப்படும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 26 Feb 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  7. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  10. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?