ஏரியூர் அருகே இளம் பெண் தற்கொலை

ஏரியூர் அருகே இளம் பெண் தற்கொலை
X

பைல் படம்

ஏரியூர் அருகே இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அஞ்சனஹள்ளி மூங்கில் மடுவு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் இவருடைய மனைவி சௌந்தர்யா வயது இருபத்தி மூன்று இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளார்.

இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது இதனால் கோபித்துக் கொண்டு அருகே உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார் .

அங்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் வந்து ஏரியூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story