பிக்கிலியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது: ஒருவர் தலைமறைவு

பிக்கிலியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது: ஒருவர் தலைமறைவு

கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட இருவர்.

பிக்கிலியில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.ஒருவர் தலைமறைவானார்.

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், ஆகிய பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வனுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து, அவரது உத்தரவின் பாப்பாரப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் முனிராஜ் தலைமையிலான போலீசார் இன்று மாலை பிக்கிலி, திருமல்வாடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிக்கிலி அடுத்த புதுகரம்பு பகுதியைச் சேர்ந்த வடிவேல் மகன் குமார் (வயது 40) தலைமையில் கஞ்சா விற்பனை நடந்து வந்துள்ளது.

இவரின் மூலம் இவரது உறவினரான தண்டகாரணஹள்ளியில் கிருஷ்ணன் மகன் சக்திவேல் (வயது 35). என்பவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டபோது விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று கிட்டம்பட்டி அடுத்த திருமல்வாடி குழந்தை மகன் சின்னசாமி வயது 55 என்பவரது வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து, சுமார் 15 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

இவர்கள் இருவர் மீதும் பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து தலைமறைவாக உள்ள புது கரம்பை சேர்ந்த குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story