/* */

ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தென்மேற்கு பருவமழை கர்நாடகா,கேரள மாநிலங்களில் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவந்தது.

இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 9582 கனஅடி தண்ணீரும், கபினி அணையிலிருந்து 700கனஅடி என மொத்தம் 10ஆயிரத்து 282 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது வினாடிக்கு தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைத்து விடப்பட்டுள்ளது. நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

இன்று காலை 8மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 9ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை காவிரியின் நுழைவிடமான தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Updated On: 23 Sep 2021 7:27 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...