காவிரி ஆற்றின் பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 20,000 கன அடியாக சரிவு
காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 25,000 கன அடியிலிருந்து 20,000 கன அடியாக குறைந்துள்ளது.
HIGHLIGHTS
கர்நாடக மற்றும் தமிழக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் கடந்த இரண்டு நாட்களாக நீர்வரத்து அதிகரித்தது. காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்குலுவுக்கு வினாடிக்கு 17,000 கன அடியிலிருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.
நேற்று காலை நிலவரப்படி 21,000 கன அடியிலிருந்து 25,000 கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து மழை குறைந்ததால், இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 20,000 கன அடியாக குறைந்துள்ளது.
மேலும் நீர்வரத்து குறைந்தாலும் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டு, பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தடை நீட்டித்துள்ளது.
தொடர்ந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வருவாய் துறை, காவல் துறை மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டுள்ளனர்.