தருமபுரியில் சுப்பிரமணியசிவா 138 -ஆவது பிறந்த நாள் விழா: அரசு சார்பில் மரியாதை

தருமபுரியில் சுப்பிரமணியசிவா 138 -ஆவது பிறந்த நாள் விழா: அரசு சார்பில் மரியாதை

தருமபுரியில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷிணி தலைமையில் நடைபெற்ற சுப்பிரமணிய சிவா 138 வது பிறந்த நாள் விழா

பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்பிரமணிய சிவா நினைவு மணிமண்பத்தில் அரசு சார்பில் ஆட்சியா் எஸ்.திவ்யதர்ஷிணி மரியாதை செய்தார்

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் விடுதலைப் போராட்ட வீரா் சுப்பிரமணிய சிவா வின் 138 வது பிறந்தநாள் விழா இன்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.

பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்பிரமணிய சிவா நினைவு மணிமண்பத்தில், செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதர்ஷிணி, சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இதேபோல, பாப்பாரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள சுப்பிரமணிய சிவா மற்றும் பாரத மாதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த விழாவில், முன்னாள் அமைச்சர் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.என்.பி.இன்பசேகரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வடிவேல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் வேலுமணி அரசு அலுவலர்கள் உள்ளிட்டோா் தியாகி சுப்ரமணிய சிவா நினைவிடத்தில் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.



Tags

Next Story