பென்னாகரம் அருகே நாயக்கனூர் கிராமத்தில் ஊர் பொதுக் கூலி காளை உயிரிழப்பு

பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மாலை அணிவித்து கண்ணீர் மல்க காளைக்கு அஞ்சலி செலுத்தினர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கரியம்பட்டி, செங்கனூர். நாயக்கனூர் உள்ளடிக்கி 7 கிராமத்துக்கு தாய் கிராமமான நாயக்கனூர் கிராமத்தில் ஊர் பொது சாமி கூலி காளை கடந்த 20 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது.
இந்த காளை வருடந்தோறும் 7 ஊர் சார்பாக நடைபெறும் எருது விடும் போட்டியில் முதன்மையாகவும் சிறப்பாகவும் பங்கேற்று வந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் அன்பு காட்டும் இந்த காளை எருது விடும் விழாவில் தனது வீரத்தைக் காட்டி வந்துள்ளது. இதற்கு பொதுமக்கள் சார்பாக புல், தவிடு போன்ற உணவுகள் தினந்தோறும் வழங்கப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் இந்த காளை திடீரென உயிரிழந்துள்ளது. இதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினார்கள். பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
மனிதர்களுக்கு செய்வதுபோல் அனைத்து இறுதி சடங்குகளும் மேள தாளத்துடன் சிறப்பு பூஜைகள் செய்து நல்லடக்கம் செய்தனர்.
ஏழு கிராமத்துக்கு தாய் கிராமமான நாயக்கனூர் ஊர் பொது கூலி காளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu