/* */

தர்மபுரியில் 100க்கும் மேற்பட்டோர் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் இணைவு

தர்மபுரியில் 100க்கும் மேற்பட்டோர் எஸ்எப்ஐ சங்கத்திலிருந்து விலகி அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் இணைந்தனர்.

HIGHLIGHTS

தர்மபுரியில் 100க்கும் மேற்பட்டோர் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் இணைவு
X

இந்திய மாணவர் சங்கத்தினர் அந்த அமைப்பில் இருந்து விலகி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் முன்னிலையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் (ஏஐஎஸ்எப்)இணைந்த ௧௦௦க்கும் மேற்பட்டோர்.

தர்மபுரி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வருகை தந்தார். அப்போது இந்திய மாணவர் சங்கத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழமுதன் தலைமையில் 100 -க்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்க உறுப்பினர்கள் அந்த அமைப்பில் இருந்து விலகி அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் தங்களை இணைத்து கொண்டனர்.

பின்னர் அனைவரையும் வரவேற்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசும் போது, நீங்கள் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் இணைந்ததை வரவேற்கிறேன்.நீங்கள் அனைவரும் இந்த மாவட்டத்தில் பிரச்சனைகளின் அடிப்படையில் சிறப்பாக செயல்பட வேண்டும். மாவட்ட கட்சி மற்றும் தொழிற்சங்கத்துடன் தொடர்பு கொண்டு நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.

பின்னர் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் தமிழமுதன் மனு வழங்கினார். அதில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் முறைகேடு நடந்திருப்பதால் பட்டியலின மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாய மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இதில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி மாணவர்கள் பாதிக்காமல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர். இந்த நிகழ்வின் போது மாவட்டச் செயலாளர் எஸ்.தேவராசன், மாநிலக்குழு உறுப்பினர் கமலாமூர்த்தி, ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் கே.மணி ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 15 Oct 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  4. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  5. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  6. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  7. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  8. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு