/* */

கர்நாடக அணைகளில் திறக்க பட்ட தண்ணீர்: 5000 கனஅடி தமிழகம் வந்தது

கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர், தமிழக எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.

HIGHLIGHTS

கர்நாடக அணைகளில் திறக்க பட்ட தண்ணீர்: 5000 கனஅடி தமிழகம் வந்தது
X

கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர்,  தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது

கர்நாடகமாநில அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 10 ஆயிரத்து 238 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து, மொத்த கொள்ளளவான 124.80 அடியில் தற்போதைய நீர் மட்டம் 94.46 அடியாகும். இதில் நீர்வரத்து 11920 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 5238 கன அடியாகும்.

அதேபோல், கபிணி அணையின் மொத்த கொள்ளளவு 84.00 அடி; தற்போதைய நீர் மட்டம் 76.11 அடி; நீர்வரத்து 5123 கன அடி, அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, 5000 கன அடி. மொத்தமாக இரண்டு அணைகளில் இருந்தும் தற்போது வெளியேற்றப்படும் நீரின் அளவு, 10 ஆயிரத்து 238 கனஅடியாக உள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், 3 நாட்களுக்கு பிறகு தமிழக எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டுலுவை இன்று வந்தடைந்தது. இதனால் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1500 கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து உயர்ந்து, வினாடிக்கு தற்போது 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On: 22 Jun 2021 1:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு