/* */

ஒகேனக்கல் அருகே போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை: கணவர் கைது

ஒகேனக்கல் அருகே குடும்பத் தகராறில் குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஒகேனக்கல் அருகே போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை: கணவர் கைது
X

கத்தியால் குத்திக் கொலை செய்ய பட்ட ஜெரினா கைது செய்யப்பட்ட கழில்.

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அடுத்த புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீன் வெட்டும் தொழிலாளி ஜெரினா, இவருடைய கணவர் கழில். இவர் மீன் வெட்டுதல் மட்டும் ஆயில் மசாஜ் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்படுவது வழக்கம். இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் இருவருக்கும் மீண்டும் ஏற்பட்ட குடும்பத் தகராறில் குடிபோதையில் இருந்த கழில் அவருடைய மனைவி ஜெரினாவை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் ஜெரினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து வந்த ஒகேனக்கல் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கொலையாளி கழிலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதையில் கணவர் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On: 5 Oct 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க