/* */

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ஒகேனக்கல்லில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்தாக உள்ளது.

HIGHLIGHTS

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
X

ஒகேனக்கல் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்.

கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அங்கு உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க துவங்கி உள்ளதால், அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.


கிருஷ்ணராஜ சாகர் அணை:

மொத்த கொள்ளளவு 124.80 அடி

தற்போதைய நீர் மட்டம் 89.62 அடி

நீர்வரத்து 6039 கன அடி

நீர் வெளியேற்றம் 1426 கன அடி

கபிணி அணை:

மொத்த கொள்ளளவு 84.00 அடி

தற்போதைய நீர் மட்டம் 78.71 அடி

நீர்வரத்து 11628 கன அடி

நீர் வெளியேற்றம் 700 கன அடி


இன்று காலை நிலவரப்படி இரண்டு அணைகளில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படும் நீரின் அளவு 2 ஆயிரத்து 126 கன அடியாக உள்ளது. எனவே, எந்த நேரமும் தமிழகத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

Updated On: 15 July 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...