/* */

தருமபுரி அருகே சிக்கன் கடையில் தகராறு: கத்தியால் குத்தி ஒருவர் கொலை

தருமபுரி அருகே சிக்கன் கடையில் குடிபோதையில் தகராறு செய்தவர் கத்தியால் ஒருவரை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

HIGHLIGHTS

தருமபுரி அருகே சிக்கன் கடையில் தகராறு:  கத்தியால் குத்தி ஒருவர் கொலை
X

கொலை செய்த சுந்தரம்

தருமபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த மல்லாபுரத்தை சேர்ந்த அண்ணாதுரை கூலி தொழிலாளி. இவர் தனது மனைவி புஷ்பா மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார்.

அண்ணாதுரை கடந்த ஓர் ஆண்டுக்கு முன் மல்லாபுரத்தில் உள்ள ஒரு சிக்கன் கடையில் பணி செய்து வந்துள்ளார். தற்போது தருமபுரியில் உள்ள ஹலோபிரிக்ஸ் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஓர் ஆண்டுக்கு முன் வேலை பார்த்த சிக்கன் ரைஸ் கடைக்கு அண்ணாதுரை சென்றுள்ளார். அப்போது அங்கு மது போதையில் இருந்த சோளப்பாடியை சேர்ந்த சுந்தரம் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கடையில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்பொழுது சுந்தரம், தகாத வார்த்தைகளால் பேசியும் கடையில் இருந்த கல்லா பெட்டியில் உள்ள பணத்தையும் எடுக்க முயன்றுள்ளார்.

அவரை தடுத்து நிறுத்திய அண்ணாதுரை, எதற்காக இப்படி செய்கிறீர்கள்.குடி போதையில், தேவையில்லாமல் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள் என தட்டிக் கேட்டுள்ளார். இதில் அண்ணாதுரை-சுந்தரம் இருவருக்கும் இடையே கடுமையான வாய் தகராறு ஏற்பட்டவே, ஆத்திரமடைந்த சுந்தரம், தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அண்ணாதுரையின் வயிற்று பகுதியில் குத்தியுள்ளார்.

இதில் அண்ணாதுரைக்கு அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் அருகிலிருந்தவர்கள் ரத்தம் வெளியேறாமல், தடுக்க துணியை கட்டி, ஒரு கடையின் முன் அமர வைத்து முதலுதவி அளித்து தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இரத்த போக்கு அதிகமாக இருந்ததால், முதலுதவி கொடுக்கப்பட்டு, தருமபுரியிலிருந்து மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சேலத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் சேலம் செல்லும் வழியிலே அண்ணாதுரை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து அண்ணாதுரையை கத்தியால் குத்திய சுந்தரம் மற்றும் அவரது நண்பரையும் இருவரையும் இண்டூர் காவல் துறையினர் கைது செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சிக்கன் ரைஸ் கடையில் ஏற்பட்ட தகராறில், கத்தியால் குத்தி ஒருவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 26 Sep 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’