/* */

பென்னாகரம் அருகே சஞ்சீவிராய சுவாமி கோயிலில் பக்தர்களின் வருகைக்கு தடை

பென்னாகரம் அருகே சஞ்சீவிராய சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்களின் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு

HIGHLIGHTS

பென்னாகரம் அருகே சஞ்சீவிராய சுவாமி கோயிலில்  பக்தர்களின் வருகைக்கு தடை
X

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள தித்தியோப்பனஅள்ளி ஊராட்சியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற அருள்மிகு சஞ்சீவிராய சுவாமி திருக்கோயில். மலைமீது அமைந்துள்ள இந்த திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இக்கோயிலில் வழிபட சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டு செல்வது வழக்கம். தற்பொழுது கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் தமிழக அரசு வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வதற்கு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் சஞ்சீவிராய சுவாமி திருக்கோவில் இந்த ஆண்டு புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமைகளிலும் நடைபெற உள்ள திருவிழா மற்றும் பக்தர்களின் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் நுழைவு வாயில் பகுதியிலேயே அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சஞ்சீவிராய சுவாமி திருக்கோயிலில் வழிபட ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். இன்று கோவிலில் வழிபட அனுமதி இல்லை என அறிந்து வழிபாடு நடத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இருப்பினும் பக்தர்கள் கோயில்கள் செல்லாமல் மண்டபத்தின் அருகே அலங்கரிக்கப்பட்டிருந்த சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி சென்றனர்.

Updated On: 26 Sep 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!