/* */

தருமபுாி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருவா் தீக்குளிக்க முயற்சி

தருமபுாி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், நிலத்தகராறு காரணமாக இருவா் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

தருமபுாி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருவா் தீக்குளிக்க முயற்சி
X

தருமபுாி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் , நிலத்தகராறு காரணமாக தீக்குளிக்க முயன்ற பெண்கள்.

தருமபுாி அடுத்த கடுக்கப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவா் கன்னியப்பன், மாதம்மாள். இவா்களுக்கு சொந்தமாக 2 ஏக்கா் நிலம் உள்ளது. இவா்களுக்கு சொந்தமான இடத்தில், வீடு கட்டி வசித்து வருகின்றனா். இவா்களின் நிலத்தில் மேய்ச்சல் நிலம் எனக்கூறி, வெங்கட்டன், மாாிமுத்து ஆகியோர், இவா்களின் வீட்டை இடித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, கடந்த 2016 முதல், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல்துறை என பல இடங்களில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்று தருமபுாி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தாய் மாதம்மாள் , மகள் கன்னியம்மாள் ஆகிய இருவரும் மண்ணெண்ணை கொண்டு வந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றனா்.

உடனடியாக, அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார், மண்ணெண்ணையை கைப்பற்றி, தற்கொலைக்கு முயன்ற இருவரையும் தடுத்து நிறுத்தி பாதுகாத்தனர். நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் வீட்டை இடித்ததற்கு நியாயம் வேண்டி தற்கொலைக்கு, இருவர் முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 12 Jan 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது