தருமபுாி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருவா் தீக்குளிக்க முயற்சி

தருமபுாி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் , நிலத்தகராறு காரணமாக தீக்குளிக்க முயன்ற பெண்கள்.
தருமபுாி அடுத்த கடுக்கப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவா் கன்னியப்பன், மாதம்மாள். இவா்களுக்கு சொந்தமாக 2 ஏக்கா் நிலம் உள்ளது. இவா்களுக்கு சொந்தமான இடத்தில், வீடு கட்டி வசித்து வருகின்றனா். இவா்களின் நிலத்தில் மேய்ச்சல் நிலம் எனக்கூறி, வெங்கட்டன், மாாிமுத்து ஆகியோர், இவா்களின் வீட்டை இடித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, கடந்த 2016 முதல், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல்துறை என பல இடங்களில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்று தருமபுாி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தாய் மாதம்மாள் , மகள் கன்னியம்மாள் ஆகிய இருவரும் மண்ணெண்ணை கொண்டு வந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றனா்.
உடனடியாக, அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார், மண்ணெண்ணையை கைப்பற்றி, தற்கொலைக்கு முயன்ற இருவரையும் தடுத்து நிறுத்தி பாதுகாத்தனர். நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் வீட்டை இடித்ததற்கு நியாயம் வேண்டி தற்கொலைக்கு, இருவர் முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu