/* */

ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு நீர் வரத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் பொதுப்பணித்துறை கண்காணித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

தென்மேற்கு பருவமழை கர்நாடகா,கேரள மாநிலங்களில் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவந்தது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நீர் வரத்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது மழை குறைவு காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறையyf தொடங்கியது.

இந்நிலையில், தற்போது கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர், படிப்படியாக அதிகரித்து இன்று காலை 8மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 9ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை காவிரியின் நுழைவிடமான தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Updated On: 27 Sep 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!