Begin typing your search above and press return to search.
காவிரி ஆற்றில் பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6000 கன அடியாக அதிகரிப்பு
காவிரி ஆற்றில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6000 கன அடியாக அதிகரித்துள்ளது.
HIGHLIGHTS
கர்நாடக மாநிலத்தில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தமிழகத்திற்கு, காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 ஆயிரத்து 174 கன அடி வரை திறக்கப்பட்டது. தொடர்ந்து மழை குறைந்ததால், அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது.
இதனால் கர்நாடக அணைகளிலிருந்து, காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரையோரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6000 கன அடியாக உள்ளது.