ஒகேனக்கல்: 25000 கனஅடி நீர் வரத்து: கரையோரப் பகுதிகளில் தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பு

ஒகேனக்கல்: 25000 கனஅடி நீர் வரத்து: கரையோரப் பகுதிகளில் தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பு
X

ஒகேனக்கல் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் செந்நிறமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வினாடிக்கு 21,000 கன அடியிலிருந்து 25,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மற்றும் தமிழக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து, 10 நாட்களுக்கு பிறகு அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்குலுவுக்கு வினாடிக்கு 11,000 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, நேற்று காலை நிலவரப்படி 21,000 கன அடியாக உயர்ந்தது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரித்து இன்று காலை நிலவரப்படி 21,000 கன அடியிலிருந்து 25,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டு, பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தடை நீட்டித்துள்ளது.

மேலும் மழை நீர் என்பதால் காவிரி ஆற்றில் செந்நிறமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டுள்ளனர்.

மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கும் என்பதால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் கர்நாடக மாநிலத்தில் கன மழை பெய்து வருவதால், மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி