/* */

மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலி
X

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மர்ம விலங்கு கடித்து 11ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் பத்ரஹள்ளி ஆரல்குந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கவுண்டர். இவர் 20 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் ஆடுகளை மேய்த்து விட்டு தனது விவசாய நிலத்தில் உள்ள ஆட்டுப்பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். காலையில் தனது ஆட்டுபட்டியில் வந்து பார்த்த போது 11 ஆடுகள் மா்மவிலங்கு கடித்து உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து வனத்துறை மற்றும் கால்நடை துறைக்கு தகவல் தெரிவித்தனர். கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த ஆடுகளை ஆய்வு செய்து ஆடுகளை புதைக்க அறிவுறுத்தினர். இதனையடுத்து குழி தோண்டி உயிரிழந்த 11 ஆடுகளையும் புதைத்தனர். ஆடுகள் பலியான சம்பவத்தால் அப்பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.

Updated On: 2 March 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்